WE REMEMBER
Birth
21 5 1945
Death
15 10 2025
Late Kamalambihai Velautham
< Back to profile
Write Tribute
Tribute 7 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அம்மா உன்னை எப்படி மறப்பேன்
Tribute in Light
திருகோணமலை மண்ணின் மகள் . விதானையார்தம் மருமகளாம் மனவெழில் அம்மை.. ஐயா வேலாயுதம்.. அவரை அன்புசால் மணந்த உறவென எண்மரைப் பெற்றவராய்.. வாழ்க்கையின் மாலில் மண்ணைக் கடந்து லண்டனில் வாழ்விடமென வளம் கண்டு வாழ்ந்திட்டார்.. என்னவன் அன்புறைத் தம்பி வில்வராசாவின் மனதுறைந்த அம்மையார்... காலத்தின் கோலத்தில் கனவு கலைந்திட காலன் அழைத்திட்ட.. ஆண்டவன் நிழலடி சரண் கண்டார்.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா இறைவனின் காலடியில் அமைதி கொள்ளட்டும் ???
Tribute in Light
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஒம் சாந்தி சாந்தி.
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்கள்! அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்!
Tribute in Light
வாழ்க்கை என்னும் போரில் வீரமாய் நின்றவரே, எழு மக்களைச் சுமந்து வெற்றியைப் பெற்றவரே. நேர்மையும் நிதானமும் கலந்து இருந்தாள், நேராகப் பேசினாள் – ஆனால் மனம் மெல்லியது. பாசம் என்றால் அவள் பெயர், பிடித்தவரை உயிராய் நேசித்த அருள்மிகு தாய். அவளின் அன்பு – நிபந்தனையில்லா வெளிச்சம், அதை உணர்ந்தவர்கள் வாழ்நாள் நினைவாக வைத்திருப்பார்கள். சில வாரங்கள் தான் – ஆனாலும் மனம் நிறைந்த பேச்சுகள், மாமாவுடன் பகிர்ந்த நினைவுகள் – மனதைத் தொட்டவை. இன்று அவள் இல்லையென்றாலும், அவள் நிழல் எங்கும், அவள் நெஞ்சின் அன்பு எப்போதும் எங்களை வழிநடத்தும்.
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் ? Our deepest condolences to the family grieving the loss of their beloved mother. We pray that her soul may rest in eternal peace at the feet of the Almighty. ?