Tribute in Light
உரும்பிராயில் பிரபலமாகவும், கௌரவமாகவும், அமைதியாகவும் வாழ்ந்த குடும்பங்களில் ‘நிம்மதி’ வீட்டில் வாழ்ந்த தங்கள் தர்மலிங்கம் பாக்கியம் குடும்பமும் ஒன்று. உரும்பிராய் கற்பகபிள்ளையார் கோவில் எட்டாம் திருவிழாவென்றால் நிம்மதி வீட்டு திருவிழா, பெரிய விமரிசையாக சிகரங்கள், சப்பறங்களுடன், விடிய விடிய பல கூட்டம் மேளங்கள் இசைக் கச்சேரிகள் என்று ஊரே திரண்டு நிற்கும். இவை எல்லாவற்றிற்கும், அந்தக் குடும்பவிருட்சம் ஆல் போல் இன்று தழைத்தோங்கி ஒற்றுமையாக செழித்திருக்க,, ஆணி வேராக இருந்து அரும்பாடுபட்ட ,தையல் பாக்கியம் என்று செல்லமாக அழைக்கப்பட்ட தங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி அம்மாவின் இனிய நினைவுகளுடன் தாங்கள் எல்லாம் அமைதிபெற பிரார்த்திக்கிறோம்.