யாழ்.குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை குலசிங்கம் அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் மருமகனும்,
இரத்தினராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தட்சாயினி(கொழும்பு), விபூசனன்(சுவிஸ்), தாரகா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், கந்தசாமி(கனடா), சரஸ்வதி(கனடா), கயிலநாதன்(கொழும்பு), சத்தியதேவி(கனடா), சறோஜினிதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(சுவிஸ்), தேவராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமாவதி(பிரான்ஸ்), கருணாவதி, இரத்தினம், காலஞ்சென்ற விஜயலட்சுமி, பாலகுருநாதன், கிருஷ்ணமூர்த்தி, சிவலிங்கம், ஶ்ரீகாந்தராஜா ஆகியோரின் மைத்துனரும்,
கபிசன், சஞ்சனா, அலீசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2021 வியாழக்கிழமை அன்று கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.