வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்
அன்புடையீர் !
கடந்த 23.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்த எமது குடும்பத்தலைவி அமரர் ஜெயலக்ஷ்மி யோகராஜா அவர்களின் வீட்டுக் கிருத்திய கிரியைகள் 22.03.2024 வெள்ளிக்கிழமை நெடியகாடு வல்வெட்டித்துறை, இலங்கையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்- தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம் பிள்ளைகள்
மரண அறிவித்தல்
யாழ். வல்வெட்டித்துறை, "காட்டுவளவை” பிறப்பிடமாகவும்,
“கொழும்பு, பருத்தித்துறை, சென்னை, லண்டன்” ஆகிய இடங்களில் வசித்தவருமான
திருமதி ஜெயலக்ஷ்மி யோகராஜா (லக்ஷ்மி அம்மா / தங்கன்) அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை தை மாத பூர்வபக்க திரயோதசி திதியில் இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும்,
அமரர் நடராஜா யோகராஜாவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் (ராசலிங்கம்) - யோகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பார்த்தீபன் [பாபு] (UK), காண்டீபன் (Australia), பகீரதன் [பகீ] (UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சௌமியா, சுதாஸ்வரி, இன்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாவலா, நாவலன், மாவலன், ஹரி, ஹேசல் ஆகியோரின் ஆசை அப்பாச்சியும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி,
மற்றும் தற்போது வல்வெட்டித்துறையில் வசிக்கும் விஸ்வநாதப்பிள்ளை (தம்பி அண்ணா), தங்கராசா, ராமச்சந்திரன் (ராமு கடை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.