மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, கொழும்பு தெஹிவளை, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அரியரெத்தினம் பத்மநாதன் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து அரியரெத்தினம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ராஜரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜிதா, சஞ்ஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணானந்தன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், மனோன்மணி, சிவஞானமணி மற்றும் ஜெகநாதன்(பிரித்தானியா), ஜெயமணி(பிரித்தானியா), ரங்கநாதன்(பிரித்தானியா), தட்பரநாதன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாய்ஷாலினி, சாய் கிரிஷா, சாய் பிரபு, சத்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.