யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி . நளாயினி பாலசுப்பிரமணியம் அவர்கள், 27.03.2024 புதன்கிழமை அன்று கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.கனகரட்ணம்,திருமதி.லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற திரு. ந.பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், திருமதி. நந்தினி பரணீதரன் , திரு.நந்தா பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத்தாயாரும், இ.பரணீதரன் (கணக்காளர் , இலங்கை மின்சாரசபை ) அவர்களின் அருமை மாமியாரும் , சகிஷ்னவி மற்றும் கோபிராம் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
காலஞ்சென்ற திருமதி. மகேஷ்வரி,காலஞ்சென்ற திருமதி.புவனேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற திருமதி. காந்திமதி அவர்களுடைய அன்பு தங்கையும், காலஞ்சென்ற திருமதி. தையல்நாயகியின் அன்பு அக்காவும்
காலஞ்சென்ற திரு அருணாச்சலம், காலஞ்சென்ற திரு சோமசுந்தரம், காலஞ்சென்ற திரு வேலாயுதம் மற்றும் காலஞ்சென்ற திரு சிவபாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 2024.03.28 காலை 9:00 முதல் 1:30 வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு
பின்னர் 2024.03.28 அன்று பி.ப.13:14 முதல் 13:45 வரை ஈமைக்கிரிகைகள் நிகழ்த்தப்பட்டு, 14.00 PM அளவில், கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இத்தகவலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்