மலேசியாவை பிறப்பிடமாகவும் பன்னாலை, கொழும்பை (கொச்சிக்கடை தற்போது வெள்ளவத்தையில் வசித்து வந்தவருமாகிய
திருமதி அன்னபூரணம் சிவசண்முகநாதன் அவர்கள் 14.08.2025 இன்று வியாழக்கிழமை 85வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை (மலாயன் பென்சனியர்), சிவகாமிப்பிள்ளையின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், குஞ்சரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவப்பிரகாசம் சிவசண்முகநாதன்(Banker) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார் ( Norway), சிவவதனா ( Norway ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேந்திரன் (Norway), பகீரதி (Norway) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷானு, , நிருஜா, கோபிதா, சிவவேதன், சஞ்ஜேய் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை தம்பு ,ஆறுப்பிள்ளை செல்லத்துரை, திருமதி செல்லம்மா கதிர்காமத்தம்பி (தங்கம்மா ), மற்றும் திருமதி ரஞ்சினி நடராஜா (குஞ்சு) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
.
அன்னாரின் பூதவுடல் ஜெயரத்னே மலர்சாலையில் 17.08.25. ஞாயிற்றுக்கிழமை மு.ப காலை 8.30 மணி முதல் பி.ப 2.00மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 17.08.25. ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 3.30 மணிவரை நடைபெற்று பி.ப 3.30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனக்கிரியைக்காக பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Address:
ஜெயரத்னே மலர்சாலை
2B எவிற்றிக்கல மாவத்தை / 2B, Alpiygela Mawatha
Borella / பொரளை
கொழும்பு 8 / Colombo 08
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.