மடுவை வதிவிடமாகக் கொண்டவரும், மடு உணவகத்தின் உரிமையாளருமான,
விராஸ் மரியாம்பிள்ளை அவர்கள்,
கடந்த 2024.08.04ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த மன வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் பூதவுடல்
2024.08.07 புதன்கிழமை அன்று கொழும்பில் உள்ள
ரேமன்ட் மலர்ச்சாலையில்
(Raymond Funeral Home, 115 D. S. Senanayake Mawatha, Colombo, Sri Lanka)
காலை 7:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பின்னர் 2024.08.08 வியாழக்கிழமை
அன்னாரின் பூதவுடல்,
அவரின் பிறப்பிடமான குஞ்சுக் குளம் மற்றும்
அவரின் முன்னாள் வதிவிடமான பண்டி விரிச்சானுக்கும் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அன்னாரின் இறுதிச் சடங்கானது 2024.08.09 வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் இரங்கல் திருப்பலியின் பின்னர் , மடு திருப்பதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் பிரிவால் துயருடும், மனைவி, மரியாம்பிள்ளை மதலேனா (ஓய்வு பெற்ற ஆசிரியை) ,
பிள்ளைகள்: ரெஜி (Norway) விஜி (Swiss) ராஜி (Norway) சுஜி (UK) சஜின் Noel (Swiss) ரஜின் (America) ,
மருமக்கள் : வசந்தி, வதி , காலம் சென்ற ரவீந்திரன், அன்றன், சுகி ,
பேரப்பிள்ளைகள்: மௌலி ஆஞ்சயன் ,அட்சயா, மனிஷா, அஸ்மிதா, வேதினி, அனுசியா, விதுஷன், மேரி, ரஜீவ லவுசன், ரஜீவ பிரகாஷ்