துயர் பகிர்வு
வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு. துரைராஜரட்ணம் நவநீதன் அவர்கள் 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 9:08 மணியளவில் பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி திதியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற துரைராஜரட்ணம், தயாநிதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலம் சென்ற இராமநாதன், இராஜலஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லலிதாவின் அன்புக் கணவரும்,
வினு, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலம் சென்றவர்களான சேர்மன் நவரத்தினம் வள்ளி நாயகி ஆகியோரினதும், காலம் சென்றவர்களான ஆனந்தராசா ஆதிலட்சுமி ஆகியோரினதும் பாசமிகு பேரனும்,
சத்யவதி (சத்யா), காலம் சென்ற நிலானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வதயாளன் (மாறன்), ஜெயராஜா (வெள்ளிப் பவுண்), சங்கரலிங்கம், மனோகர், லக்ஷ்மணன், மதிவதனா, காலம் சென்ற ராஜாராம், றஜனி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரிசோத், சுபோத், சுஜித், யோசனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கேள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.