யாழ். வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
திரு செல்வச்சந்திரன் சிவகணேசன் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை காலை 9:25 மணிக்கு, பங்குனி மாத அமரபக்க ஏகாதசி திதியில் லண்டன் இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை சிவகணேசன் - மகமாசியம்மா சிவகணேசன் (மாம்பழம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு திருமதி விஸ்வநாதபிள்ளை - ராணிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஜன், தனுஜன், மயூரா அகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமச்சந்திரன், பவானி, ரஞ்சினி, பாலச்சந்திரன், யோகச்சந்திரன், நளாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருமைச்செல்வம் அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,
புவனச்சந்திரன், ராதா, திகலொளிபவன், சிவாஜினி, நளினா, துரைரெட்ணம்,
காலஞ்சென்ற குமுதினி,
சாந்தினி, ஜமுனா, மகேந்திரகுமார், தவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
பிரபாகரன், கணேசலிங்கம், ஜெயந்தி, பாலசேகர் ஆகியோரின் அன்பு சகலனும்
ரவிநேசன், கௌரி, சுடரோன், சேஜோன், வித்யா, ஆர்த்திகா, பூவரசன், திருமொழி, அர்ஜுன் ஆகியோரின் அன்பு மாமானாரும்
தாரணி, கஸ்தூரி, கார்த்திக், நரேஷ், புவனேஷ், கஜன், நதியா, சிவாஜன், சுவேனியா, கௌதம், சஞ்சீவ், அபிராமி, அபிநயா, அரவிந்த், தீபக், தீபிகா, சகானா, சாருகன் ஆகியோரின் அன்பு பெரியப்பா மற்றும் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் ஐயாவிற்கு நேரிலும் நேரலை மூலமாகவும் Social Media மூலமாகவும் அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் மற்றும் அனைத்து விதத்திலும் எங்கள் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் மற்றும் எங்களுக்கு எல்லா விதத்திலும் உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம்.
நன்றியுடன்...
நந்தினி - அனோஜன் - தனுஜன் - மயூரா